புதன், 14 ஜூலை, 2010

Tea Bun






























  
இவை ஒரு குட்டி மாணவரின் குறும்புத்தனங்கள்.

இந்த மாணவர்  பெயர் கோகுலன். முதலாம் ஆண்டு படித்தார். ஒரு நாள் பாடசாலை போனதும் கரும்பலகையை அழிப்பதற்கு duster ஐத் தேடினேன் காணவில்லை. மேசை துடைப்பதற்கென வைத்திருந்த துணியை எடுத்து உபயோகித்தேன்.

மாலையில் வீட்டில் சில குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். கோகுலனின் அக்காமார் இருவரும் வந்து படிப்பார்கள். அன்றும் அவர்கள் வந்தார்கள். படித்து முடிந்ததும் அழைத்துப் போக வருபவருக்காகக் காத்துக்கொண்டு நிற்கும் வேளை ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். அன்றும் அவர்கள் வீட்டில் என்ன சமையல், யார் வந்தார்கள், என்ன நடந்தது என்று சொல்லிக் கொண்டிருந்த  போது, "டீச்சர், கோகுலன் இன்று வகுப்பு duster  ஐ வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வந்து கழுவிக் கூரை மேல் காயப் போட்டிருக்கிறார்," என்றார்.   
 
"ஏன் அப்படிச் செய்தார்?" என்று கேட்டேன். "அதுவா! கெதியாக எங்கள் வீட்டில் குட்டிப் பாப்பா வரப் போகுது. அதற்குத் தலையணைக்குத்தான்," என்றார்கள்.
 
மறு நாள் பாடசாலையில் விசாரித்தேன். அது தனக்கு வேண்டும், தனக்கு வேண்டும் என்றார். இரண்டு வாரங்களின் பின் தம்பிப் பாப்பா பிறந்து விட்டார் என்ற செய்தியோடு வந்தார்.
 
"சரி, பாப்பாவிற்கு என்ன பெயர்?" என்று கேட்டேன். "டீ பன்" (தீபன்) என்றார். அன்று முதல் "தம்பி பெயர் என்ன?" என்பதும், அவர் "டீ பன்" என்பதும் சகஜமாகி விட்டது.
 
இன்னொரு நாள் இடைவேளையின் போது, ஒரு பெரிய வகுப்பு மாணவரை அழைத்து கன்டீனில் எனக்குத் தேனீர் வாங்கி வரும்படி அனுப்பினேன். சிறிது நேரத்தில் அவர் தேனீருடன் வடையும் கொண்டு வந்து நான் கொடுத்த பணத்தையும் திரும்பத் தந்தார். "கோகுலன் பக்கத்தில் இருந்த தன் வீட்டிற்குப் போய்த் தேனீரும் கூடவே சாப்பிடவும் ஏதாவதும் வாங்கி வரும்படி சொன்னார்," என்றார்.
 
இந்தக் கதையில் வரும் குழந்தைகள் நான்கு பேரும் பிற்பாடு நாட்டு நிலமை காரணமாகப் பெற்றோருடன் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து சென்றுவிட்டார்கள். இப்போது எங்கே இருக்கிறார்களோ தெரியவில்லை.

21 கருத்துகள்:

  1. செபா ஆன்டி, நல்லா இருக்கு. பொடியன் சின்ன வயதிலேயே நல்ல விவரமான ஆளாக இருந்திருக்கிறார். டஸ்டர் நிகழ்வு நல்லா இருக்கு. அதில் தான் டீபன் - ஐ படுக்க விட்டாரா??

    பதிலளிநீக்கு
  2. //அம்மா தேங்கூஊஊ :)//
    என்னத்தைச் சொல்லுறது! இந்த மாதிரிக் குழப்படிக் கூட்டம் எல்லாம் எனக்குச் சகோதரராக அமைந்தது நான் பெற்ற பாக்கியம். ;)

    பதிலளிநீக்கு
  3. ஹைஷ் அண்ணா நல்ல பையனா இருந்தார். இந்த அதீஸோடு எப்ப கூட்டுச் சேர்ந்தாரோ... இப்படி மாறிட்டார். கடவுளே!! இதை அதீஸ், ஹைஷ் அண்ணா பார்க்கவே கூடாது.

    பதிலளிநீக்கு
  4. இனி டீ பன் னை பார்தால் இந்த நினைவுதான் வரும்.

    பதிலளிநீக்கு
  5. வானதி
    குழந்தைகளுடன் பழகும் போது நம் கவலைகள் எல்லாமே மறந்து விடும். இன்றும் அவர்களைப்பற்றி நினைப்பது மிக்க மகிழ்ச்சிதான்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஜெய்லானி,
    உங்களைப்போலவே தான் எனக்கும். அடிக்கடி நினைவு மீட்டப்படுகிறது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. ஜெபா ஆன்ரி, பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கும்போது இனிமையாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. ஹைஷ்126 சொன்னது…
    அம்மா தேங்கூஊஊ :)
    /// உழுந்து வடைக்குத்தானே?, முழுவதும் உங்களுக்கேதான்.... எங்களுக்குப் பிச்சுப்பிச்சுத் தந்திட வாணாம்:))).


    இமா சொன்னது
    //அம்மா தேங்கூஊஊ :)//
    என்னத்தைச் சொல்லுறது! இந்த மாதிரிக் குழப்படிக் கூட்டம் எல்லாம் எனக்குச் சகோதரராக அமைந்தது நான் பெற்ற பாக்கியம். ;)////
    விடுங்க இமா:), தம்பிமார் எண்டாலே குழப்படிதானே:))))


    ஹைஷ் அண்ணன்ன்ன்ன் பிளேனைக் கெதியா உயரத் தூக்குங்கோ.... வாலில பிடிச்சு என்னை இழுத்து விழுத்திடுவா இமா:))))).

    பதிலளிநீக்கு
  9. vanathy சொன்னது…
    ஹைஷ் அண்ணா நல்ல பையனா இருந்தார். இந்த அதீஸோடு எப்ப கூட்டுச் சேர்ந்தாரோ... இப்படி மாறிட்டார். கடவுளே!! இதை அதீஸ், ஹைஷ் அண்ணா பார்க்கவே கூடாது.
    //// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))). நான் எதையும் பார்க்கல்லே......

    இமா.... எங்கட வாணியைக் கண்டால் ஒருக்கால் பிடிச்சுத் தாறீங்களோ?:)))). ஒண்டுமில்லை சும்மாதான், பயப்படவாணாம் எண்டு சொல்லுங்கோ:))).

    பதிலளிநீக்கு
  10. //ஹைஷ் அண்ணன்ன்ன்ன் பிளேனைக் கெதியா உயரத் தூக்குங்கோ.... வாலில பிடிச்சு என்னை இழுத்து விழுத்திடுவா இமா:))))).// பிளேன் தரையில் தான் நிக்குது :). இமா வாலை நல்லா இழுத்து விடுங்கோ :))))))

    //vanathy சொன்னது…
    ஹைஷ் அண்ணா நல்ல பையனா இருந்தார். இந்த அதீஸோடு எப்ப கூட்டுச் சேர்ந்தாரோ... இப்படி மாறிட்டார். கடவுளே!! இதை அதீஸ், ஹைஷ் அண்ணா பார்க்கவே கூடாது.
    //// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))). நான் எதையும் பார்க்கல்லே......// நானு ஊருக்கு போய் இருந்தேன் எதையுமே பாக்கல :)

    //இமா.... எங்கட வாணியைக் கண்டால் ஒருக்கால் பிடிச்சுத் தாறீங்களோ?:)))). ஒண்டுமில்லை சும்மாதான், பயப்படவாணாம் எண்டு சொல்லுங்கோ:))).// எனக்கு ஒரு கால் வேண்டாம். இரண்டுகாலோடும் பிடிச்சு தாங்கோ :)

    பதிலளிநீக்கு
  11. முதல் நீங்கள் யாருக்கு சப்போட் எண்டு சொல்லுங்கோ ஹைஷ். எனக்குக் குழப்பமாக் கிடக்கு. தலையும் விளங்கேல்ல, வாலும் விளங்கேல்ல. ;)

    பதிலளிநீக்கு
  12. அன்று வந்ததும் அதே நிலா....
    இன்று வந்ததும் அதே நிலா.........

    பதிலளிநீக்கு
  13. என்று?
    அமாவாசையோ! ஃபுல்மூணோ!! ;)

    பதிலளிநீக்கு
  14. இமா வாலை நல்லா இழுத்து விடுங்கோ :))))))
    /// இமாவின் வாலை இழுத்துவிடச் சொல்லிப் பூஸுக்குச் சொல்றார்:))...... கடவுளே.... இனியும் நான் இங்கிருக்க மாட்டேன்..... மீ எஸ்ஸ்ஸ்

    பதிலளிநீக்கு
  15. பூஸுக்கு வால் இருக்கு. மொப்ஸிக்கும் இருக்கு. ப்ளேனுக்கும் வால் இருக்கும்.

    இமாவுக்கு மட்டும் இல்லை.

    அதனால் அதிரா'வாலை' ஒன்றும் செய்ய ஏலாது. ;))

    பதிலளிநீக்கு
  16. பூஸுக்கு வால் இருக்கு. மொப்ஸிக்கும் இருக்கு. ப்ளேனுக்கும் வால் இருக்கும். //// “வால்” கட்சி:))).

    இமாவுக்கு மட்டும் இல்லை. // “வால்” இல்லாத கட்சி:))).

    அதனால் அதிரா'வாலை' ஒன்றும் செய்ய ஏலாது. ;)) /// ஆங்.... நாங்க, வாலை வாலை ஆட்டுவோமே.... :)))).


    சரி சரி.... கோபித்திடப்பூடாது இமா... இப்படி இடையிடை கதைத்தால்தான் சுவாரஷ்யம்.

    பதிலளிநீக்கு
  17. அவ்வ்வ்வ்வ்வ்..ஜீனோதான் லேட்டா வந்துகுதா??
    அல்லாரும் கும்மியடிச்சிட்டு கடயக் கட்டிடாங்களே!! சரி போகட்டும் க்ரான்மா,உந்த பன் வெஜ்ஜி-கறிபண் தானே? ரீ மட்டும் ஒரு ஸ்ரா போட்டுத் தாங்கோவன்.

    குட்டி மாணவர் கதை நல்லா சிரிப்பூ வருது! கிக்..கிக்,கிக்!!

    பதிலளிநீக்கு
  18. ஜீனோ,
    இத்தனை நாள் தலைமறைவாகி இருந்தது ஏனோ?
    தாமதமாக வந்தாலும் உங்களுக்கு என் நன்றிகள்.
    அன்புள்ள செபா

    பதிலளிநீக்கு