முதல் வகுப்பு மாணவர்கள் என்னிடம் படித்தபோது கிடைத்தது இது.
அவ்வருடம் வகுப்பில் நாற்பத்தேழு குழந்தைகள் இருந்தார்கள். அப்போதெல்லாம் காலை எட்டு மணிக்குப் பாடங்கள் தொடங்கிப் பத்துமணி வரை நடக்கும். பின் பதினைந்து நிமிட இடைவேளை. பிள்ளைகள் சற்றுநேரம் வெளியே போய்த் தாங்கள் கொண்டு வந்திருக்கும் சிற்றுண்டிகளை உண்டு முடித்து, குளிர் பானங்களை அருந்திவிட்டு வருவார்கள். தொடர்ந்து பாடங்கள் நடைபெற்று, பன்னிரண்டு மணியுடன் வகுப்புகள் முடிவுறும்.
ஒரு மாணவன் இடைவேளையின் பின்னர் வகுப்பில் இல்லாததை அவதானித்தேன். மறு நாள் அவனிடம் விசாரித்த போது அப்பா அழைத்துப் போனதாகச் சொன்னான். 'இனிமேல் இப்படிச்செய்யாதே' என்று சொல்லி விட்டுவிட்டேன்.
அன்றும் அவன் இடைவேளையின் பின்னர் மாயமாகி விட்டான்.
மறு நாள் ஆளைத் தப்ப விடக் கூடாது என்று இடைவேளை விடுவதற்கு முன்னதாகவே கதவுக்குக் கிட்ட நாற்காலியைப்போட்டு உட்கார்ந்து அப்பியாசக் கொப்பிகளைத் திருத்த ஆரம்பித்தேன்.
எதிர்பாராத வேளை திடீரென ஒருவர் என்னை அணைத்து இரு கன்னங்களிலும் முத்தமிட திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.
'டீச்சர், போய்விட்டு வருகிறேன்' என்று சொல்லிவிட்டுத் தடுக்கு முன் பதிலுக்குக் காத்திராமல் ஓடி விட்டார் அவர்.
மறு நாள் அவரது தந்தையை அழைத்து, பாடசாலை விட்டதும் தான் அழைத்துப் போகலாம் என்று சொல்லி விட்டேன். அதன் பின்னர் ஒழுங்காக வகுப்பிலிருந்தார்.
நான் ஒய்வு பெற்ற பின்னர் ஒருதடவை தெருவில் இந்த மாணவனைச் சந்தித்தேன். வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்து சென்றார்.
வெள்ளி, 30 ஏப்ரல், 2010
திங்கள், 26 ஏப்ரல், 2010
அத்தான்
ஆசிரியையாய் என் அனுபவங்கள்
அத்தான்
பெரும்பான்மையாக புதிதாகப் பாடசாலையில் சேருகின்ற (அதாவது முதலாம் ஆண்டு) மாணவர்களுக்கே என்னை ஆசிரியராக நியமிப்பார்கள். முதல் நாள் அழுகையுடன் தான் அநேகர் வருவார்கள். அன்றும் தொடர்ந்து வந்த நாட்களிலும் பல சுவையான, மறக்க முடியாத அனுபவங்களும் ஏற்பட்டதுண்டு.
ஒரு மாணவரை, ஒருவர் வகுப்பில் விட்டு விட்டுப் போகவும் மாணவன் 'அத்தான், அத்தான்' என்று அழுது கொண்டு பின்னால் ஓடினார். ஒருவாறு சமாளித்து அழைத்து வந்து வகுப்பில் உட்கார வைத்தேன்.
சிறிது நேரத்தின் பின் அதிபர் வகுப்பைப் பார்வையிட வந்தார். அவர் என்னிடம் பேசி விட்டு வெளியே போகவும் சின்னவர் 'தம்பி, தம்பி இங்கே வாருங்கோ' என்று அழைக்க அதிபரும் நகைச்சுவையாகப் பேசுபவர், ' என்ன அண்ணே! உங்களுக்கு என்ன வேண்டும்?' என்றார். 'எனது அத்தானை வந்து என்னை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்லுங்கள்.' அதிபர் 'சரி அவர் வரும்வரை வகுப்பில் இருங்கள்,' என்றுசொல்லி விட்டுப் போனார்.
மதியம் அழைத்துப்போக வந்தவரிடம் 'மாணவன் உங்களுக்கு என்ன உறவு?' என்று கேட்டேன். 'நான் அவனுடைய அப்பா' என்றதும் தான் அவனது தாயார் அழைப்பதைக் கேட்டு அழைக்கிறான் என்பது புரிந்தது.
அத்தான்
பெரும்பான்மையாக புதிதாகப் பாடசாலையில் சேருகின்ற (அதாவது முதலாம் ஆண்டு) மாணவர்களுக்கே என்னை ஆசிரியராக நியமிப்பார்கள். முதல் நாள் அழுகையுடன் தான் அநேகர் வருவார்கள். அன்றும் தொடர்ந்து வந்த நாட்களிலும் பல சுவையான, மறக்க முடியாத அனுபவங்களும் ஏற்பட்டதுண்டு.
ஒரு மாணவரை, ஒருவர் வகுப்பில் விட்டு விட்டுப் போகவும் மாணவன் 'அத்தான், அத்தான்' என்று அழுது கொண்டு பின்னால் ஓடினார். ஒருவாறு சமாளித்து அழைத்து வந்து வகுப்பில் உட்கார வைத்தேன்.
சிறிது நேரத்தின் பின் அதிபர் வகுப்பைப் பார்வையிட வந்தார். அவர் என்னிடம் பேசி விட்டு வெளியே போகவும் சின்னவர் 'தம்பி, தம்பி இங்கே வாருங்கோ' என்று அழைக்க அதிபரும் நகைச்சுவையாகப் பேசுபவர், ' என்ன அண்ணே! உங்களுக்கு என்ன வேண்டும்?' என்றார். 'எனது அத்தானை வந்து என்னை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்லுங்கள்.' அதிபர் 'சரி அவர் வரும்வரை வகுப்பில் இருங்கள்,' என்றுசொல்லி விட்டுப் போனார்.
மதியம் அழைத்துப்போக வந்தவரிடம் 'மாணவன் உங்களுக்கு என்ன உறவு?' என்று கேட்டேன். 'நான் அவனுடைய அப்பா' என்றதும் தான் அவனது தாயார் அழைப்பதைக் கேட்டு அழைக்கிறான் என்பது புரிந்தது.
வியாழன், 22 ஏப்ரல், 2010
வியட்நாம் நண்பி அளித்த விருந்து
வியட்னாம் நண்பி எங்களை ஒரு நாள் விருந்துக்கு வரும்படி அழைத்தார். நான் மறுக்கவும் காரணம் கேட்டார். "ஒவ்வாமை காரணமாக அநேக உணவுகளை நான் சாப்பிட முடியாது என்றேன்." பரவாயில்லை உங்களுக்குச் சரிவராதவற்றை விட்டு விடுகிறேன். நாளை எனது தாய்லாந்து நண்பி ஊருக்குப்போகிறார். அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கட்டாயம் வரவேண்டும்." என்று வற்புறுத்தினார். அவரது கணவர் வந்து எங்களைக் காரில் அழைத்துப் போனார். தாய்லாந்துப்பெண், அவர் கணவர் நியூஸிலாந்தைச சேர்ந்தவர். அவர்களது குழந்தை, எங்களது நீண்ட நாள் நண்பி ஜெசி, குழந்தைகள் இருவர், இன்னுமோர் சீனப் பெண், இத்தனை பேர்தான் விருந்துக்கு வந்தவர்கள். உள்ளே போனதுமே எனக்குச் சமையல் வாசனையில் மூச்சுத் திணற ஆரம்பித்தது. நான் "inhaler" ஐ எடுத்துக்கொண்டு சற்று நேரம் வெளியே நின்று விட்டேன். திரும்ப உள்ளே வந்தவுடன் ஜெஸியின் குழந்தைகள் அருகில் வந்து உட்கார்ந்து விட்டார்கள். சாப்பாட்டு மேசைக்குப் போகும் வரை அவர்கள் அசையவில்லை. பின்னர் அறிமுகப்படலம் நடந்தது. சற்று நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம்.
பிறகு, சாப்பிட அழைத்தார்கள். மேசையில் எனக்காகவென பிரியாணி, சிக்கன் கறி, சலட் என்பன தயாராக இருந்தன. மேலும் பல உணவுகள் தயாராக இருந்தாலும எனக்கு ஏற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டதாகப் பேர் பண்ணிவிட்டு, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு மீண்டும் வீடு வந்தோம். அன்றையப் பொழுது இனிமையாகக் கழிந்தது.
பிறகு, சாப்பிட அழைத்தார்கள். மேசையில் எனக்காகவென பிரியாணி, சிக்கன் கறி, சலட் என்பன தயாராக இருந்தன. மேலும் பல உணவுகள் தயாராக இருந்தாலும எனக்கு ஏற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டதாகப் பேர் பண்ணிவிட்டு, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு மீண்டும் வீடு வந்தோம். அன்றையப் பொழுது இனிமையாகக் கழிந்தது.
புதன், 14 ஏப்ரல், 2010
வெள்ளி, 2 ஏப்ரல், 2010
வியாழன், 25 மார்ச், 2010
ஒரு ப்ளட் டெஸ்ட்டும் பஸ் பயணமும்
ஏற்கனவே தீர்மானித்திருந்தபடி இன்று காலை பேரன் வந்து இரத்தப் பரிசோதனை செய்வதற்காக 'lab' இற்கு அழைத்துப்போனார். உள்ளே பதினான்கு பேர் அமர்ந்திருந்ததைக் கண்டதும் இன்று மதியம் தான் 'காலை உணவு சாப்பிடலாம்' என்று நினைத்தேன். நேற்று இரவு உணவு எட்டு மணிக்குச்சாப்பிட்டது என்று யோசித்தபடி உட்கார்ந்தோம். ஐந்தாவது நிமிடமே என்னை அழைத்தும் ஆச்சரியத்தோடு எழுந்து சென்றேன். வெளியே வருகையில் கணவர் மறு அறைக்குள் போயிருந்தார்.
பதினைத்து நிமிடங்களில் முடிந்துவிட வீடு வந்து சேர்ந்தோம்.
காலையுணவை முடித்துவிட்டு ஓய்வெடுக்க நினைக்கவும் போனில் அழைப்பு வரவும் சரியாயிருந்தது. போனில் குட்டிப்பெண் அனான்யா "கிராண்ட்மா நாங்கள் கோவிலுக்குப் போகிறோம். நீங்களும் வாருங்கள்." என்றார். மறுக்க முடியவில்லை. புறப்பட்டோம். வழி எல்லாம் ஒரே கும்மாளம். "bus" இல் ஏறினவுடன் 'எங்கே பெல்ட்?' என்று கேட்டார்கள்.
கோவிலில் வழிபாடு முடிந்ததும் அண்மையில் இருந்த எங்கள் நண்பர்களின் விடுகளுக்கும சென்று,
வீட்டுக்குத் திரும்பிய போது மணி இரண்டைத் தாண்டியிருந்தது.
பதினைத்து நிமிடங்களில் முடிந்துவிட வீடு வந்து சேர்ந்தோம்.
காலையுணவை முடித்துவிட்டு ஓய்வெடுக்க நினைக்கவும் போனில் அழைப்பு வரவும் சரியாயிருந்தது. போனில் குட்டிப்பெண் அனான்யா "கிராண்ட்மா நாங்கள் கோவிலுக்குப் போகிறோம். நீங்களும் வாருங்கள்." என்றார். மறுக்க முடியவில்லை. புறப்பட்டோம். வழி எல்லாம் ஒரே கும்மாளம். "bus" இல் ஏறினவுடன் 'எங்கே பெல்ட்?' என்று கேட்டார்கள்.
கோவிலில் வழிபாடு முடிந்ததும் அண்மையில் இருந்த எங்கள் நண்பர்களின் விடுகளுக்கும சென்று,
வீட்டுக்குத் திரும்பிய போது மணி இரண்டைத் தாண்டியிருந்தது.
புதன், 10 மார்ச், 2010
பக்கத்து யுனிட் குட்டிப்பெண்கள் பாகம் - 2
இன்று காலை நடக்கப் போவதற்காக (walk) நாங்கள் எங்கள் 'ட்றைவ்வே'யைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்த போது பின்னால் "க்ரான்ட்மா, க்ரான்ட்பா" என்று சத்தமிட்டபடி குட்டிப் பெண்கள் ஓடி வந்தார்கள். எங்களுடன் வரவேண்டுமென்று அடம் பிடிக்கவும் அவர்களது தாயும் வரவே எல்லோரும் நடையைத் தொடர்ந்தோம். பேச்சும் தொடர்ந்தது.
"எங்கே போய் வருகிறீர்கள்?" இது நான்.
"சிங்கிள் பார்க்கிற்கு." இது பெரிய பெண்.
"வேறு என்ன பார்க்கிற்குப் போவீர்கள்?"
"சிறிய பார்க்கிற்கும், பெரிய பார்க்கிற்கும் போவோம்."
"ஓ! அப்படியா? பெரிய பார்க் எங்கே இருக்கிறது?"
"அது மிகத் தூரத்தில் இருக்கிறது. அப்பா எங்களைக் கூட்டிப் போவார். சீசோ, ஊஞ்சல்கள், ஸ்லைடர்கள், இன்னும் பல விளையாட்டுக்கள் அங்கே விளையாடலாம். மாடுகள், செம்மறி ஆடுகள், பறவைகள் எல்லாம் பார்க்கலாம். ஆனால் அவையொன்றும் உடைகள் போடவில்லை," என்று சொல்லிக் கதையை நிறுத்தினாள்.
எனக்குப் பழைய கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
சில மாதங்களுக்கு முன் ஒரு செவ்வாய்க்கிழமை, செவ்வாயும் புதனும் அவர்களின் தாய்க்கு விடுமுறை. எனவே குழந்தைகளும் வீட்டில் இருப்பார்கள். அவர்கள் வீட்டில் பெரும் பரபரப்பாக இருந்தது. தாய் உடைகளைக் கழுவுவதற்காகச் சலவை இயந்திரத்தில் போட்டுவிட்டு வந்து பார்த்திருக்கிறார். காற்றுக்குக் கதவு பூட்டுப்பட்டு விட்டது. பிள்ளைகள் உள்ளே. சாவியும் உள்ளே. மறுபுறம் முழுவதும் கண்ணாடிச் சுவர். அந்தப் பக்கம் சென்று பெரியவளைக் கதவைத் திறக்கும்படி கெஞ்சிக்கொண்டிருந்தார். அவளுக்கோ எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இருவரும் திருதிருவென விழித்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பிறகு, எங்கள் போனில் அவர்கள் தந்தையை அழைத்துச் சொல்ல அவர் வந்து திறந்து விட்டார். பெரியவள் 'விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்பது போல் "க்ரான்ட்மா! எனது நகங்களுக்குப் பொளிஷ் போட்டதால் தான் என்னால் திறக்க முடியவில்லை" என்றாள். ஆனால் இப்போது கதவைத் திறக்கும் அளவு வளர்ந்து விட்டாள்
"எங்கே போய் வருகிறீர்கள்?" இது நான்.
"சிங்கிள் பார்க்கிற்கு." இது பெரிய பெண்.
"வேறு என்ன பார்க்கிற்குப் போவீர்கள்?"
"சிறிய பார்க்கிற்கும், பெரிய பார்க்கிற்கும் போவோம்."
"ஓ! அப்படியா? பெரிய பார்க் எங்கே இருக்கிறது?"
"அது மிகத் தூரத்தில் இருக்கிறது. அப்பா எங்களைக் கூட்டிப் போவார். சீசோ, ஊஞ்சல்கள், ஸ்லைடர்கள், இன்னும் பல விளையாட்டுக்கள் அங்கே விளையாடலாம். மாடுகள், செம்மறி ஆடுகள், பறவைகள் எல்லாம் பார்க்கலாம். ஆனால் அவையொன்றும் உடைகள் போடவில்லை," என்று சொல்லிக் கதையை நிறுத்தினாள்.
எனக்குப் பழைய கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
சில மாதங்களுக்கு முன் ஒரு செவ்வாய்க்கிழமை, செவ்வாயும் புதனும் அவர்களின் தாய்க்கு விடுமுறை. எனவே குழந்தைகளும் வீட்டில் இருப்பார்கள். அவர்கள் வீட்டில் பெரும் பரபரப்பாக இருந்தது. தாய் உடைகளைக் கழுவுவதற்காகச் சலவை இயந்திரத்தில் போட்டுவிட்டு வந்து பார்த்திருக்கிறார். காற்றுக்குக் கதவு பூட்டுப்பட்டு விட்டது. பிள்ளைகள் உள்ளே. சாவியும் உள்ளே. மறுபுறம் முழுவதும் கண்ணாடிச் சுவர். அந்தப் பக்கம் சென்று பெரியவளைக் கதவைத் திறக்கும்படி கெஞ்சிக்கொண்டிருந்தார். அவளுக்கோ எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இருவரும் திருதிருவென விழித்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பிறகு, எங்கள் போனில் அவர்கள் தந்தையை அழைத்துச் சொல்ல அவர் வந்து திறந்து விட்டார். பெரியவள் 'விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்பது போல் "க்ரான்ட்மா! எனது நகங்களுக்குப் பொளிஷ் போட்டதால் தான் என்னால் திறக்க முடியவில்லை" என்றாள். ஆனால் இப்போது கதவைத் திறக்கும் அளவு வளர்ந்து விட்டாள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
